Pages

Share

Thursday 26 October 2017

சிங்கிளா டிராவல் பண்ணினா எவ்வளவு அக்கப்போர் என்று இப்போதும் தனியாக பயணம்

2010ஆம் ஆண்டில் சீசன் இல்லாத நேரத்தில் குற்றாலம் சென்றபோது வழியில் எனக்கு ஏற்பட்ட பயண அனுபவங்களை அப்போது வலைப்பூவில் பதிவிட்டிருந்தேன். இப்போது அவற்றை நான் பேசி வீடியோவாக பதிவிட்டிருக்கிறேன்...

கண்ணா... சிங்கம் சிங்கிளாத்தான் வரும்... இந்த மாதிரி டயலாக் எல்லாம் சினிமாவுக்கு ஓ.கே... ஆனா சிங்கிளா டிராவல் பண்ணினா எவ்வளவு அக்கப்போர் என்று இப்போதும் தனியாக பயணம் செய்து அவதிப்படுபவர்களுக்கு தெரியும். தனியா போனா யாரும் அடிக்க மாட்டாங்க... உதைக்க மாட்டாங்க... ஆனா "எக்ஸ்க்யூஸ்மீ... சாரி ஃபார்த டிஸ்டபன்ஸ்... கொஞ்சம் மாறி உட்காருரீங்களா?" இப்படி சிலர் கேட்பாங்க. இது முதல் ரகம்.

இன்னும் சிலர் "எல்லாரும் இப்படி தனித்தனியா உட்கார்ந்துகிட்டா நாங்க எங்கதான் உட்காருறது... மாறி உட்காருங்க" என்று அதிகார தோரணையுடன் சொல்வார்கள்... லக்கேஜ் அதிகமா இருக்கும்போது பரவாயில்லை. கையில ஒரு சின்ன பை தவிர வேற எதுவும் இல்லாதப்ப கூட இப்படித்தான் நடந்துக்குவாங்க. (நானெல்லாம் லக்கேஜ் அதிகமா இல்லாத நேரத்துல இப்படி சேர்ந்துதான் உட்காரணும்னு அடம் பிடிக்கிறதில்லை.)

நாம் அப்படியே பார்வையை ஓட்டினோம் என்றால் இரண்டு மூன்று இடங்களில் பெண்கள் பக்கத்தில் ஒரு இருக்கை காலியாக இருக்கும். அங்க அவர் மனைவியை உட்கார சொல்லிட்டு, இவர் நம்ம பக்கத்துல உட்காரலாம். ஆனா செய்ய மாட்டாங்க. திருமணம் செய்யும்போது எந்த சூழ்நிலையிலும் ஒருத்தருக்கொருத்தர் துணையா இருப்போம்னு புரியாத பாஷையில புரோகிதர் சொல்லிக்கொடுத்த சங்கல்பத்தை பிரிக்க வந்த ஆளாவே நம்மள பார்ப்பாங்க. இது ரெண்டாவது ரகம்.

இன்னும் சிலர் இருப்பாங்க. நேரே கண்டக்டர்கிட்ட போய், "சார்... நான் நாகர்கோவில் போறேன்... கோயம்புத்தூர் போறேன்... அவ்வளவுதூரமெல்லாம் தனித்தனியா உட்கார்ந்து போக முடியாது என்று முறைப்பார்கள். உடனே கண்டக்டர் வந்து  பார்த்து தனியாக இருக்கும் பாச்சுலர்சைதான் நகர்த்த பார்ப்பார்.

No comments:

Post a Comment